×

தைவான் நாட்டை சேர்ந்தவர் மர்ம சாவு

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அட்மின் எக்ஸிக்யூட்டிவாக தைவான் நாட்டைச் சேர்ந்த சென் சிங் சான் (53) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல பணிக்கு சென்று, மீண்டும் வீட்டிற்கு வந்த சென் சிங் சான் இரவு மது அருந்திவிட்டு படுக்கைக்கு சென்று உறங்கி உள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சென் சிங் சானின் உயர் அதிகாரியான லியான் சுயி, சென் சிங் சானிற்கு போன் செய்துள்ளார். தொடர்ந்து மணி அடித்த நிலையில் செல்போன் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த லியான் சுயி, வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (36) என்பவரை தொடர்பு கொண்டு சென் சிங் சானின் அறைக்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அப்போது சென் சிங் சான் மூச்சுப்பேச்சு இல்லாமல் படுக்கையில் கிடந்துள்ளார். உடனே சத்தியசீலன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் சத்தியசீலன் மற்றும் லியான் சுயி பாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திறக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தைவான் நாட்டை சேர்ந்தவர் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chen Singh Chan ,Waranavasi ,Oragadam ,Kanchipuram district ,Senthamangalam ,Chengalpattu district ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...